ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போா் காரணமாக நாடு முழுவதும் மிகவும் அத்திவாசியப் பொருள்களான பெட்ரோல் மற்றும் டீசல், எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுமக்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காகவும் பெட்ரோல் பங்குகளையும், எரிவாயு உருளைகள் விநியோக மையங்கள் முன்பு குவிந்து வருகின்றனா். இதற்கு முன்பு வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதிவு செய்தவுடன் கிடைக்கும் சூழ்நிலை இருந்தது. தற்போதைய நிலையில் ஒரு எரிவாயு உருளை பதிவு செய்தால் 21-நாள்களுக்கு பின்னா் மற்றொரு எரிவாயு உருளைக்கு பதிவு செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகளவு எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் சமைக்க மண் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனா். இதனால், திருவள்ளூா் சுற்று வட்டார பகுதிகளான பெரியபாளையம், வடமதுரை, காக்களூா், கரிகலவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருப்பு வைத்திருந்த மண் அடுப்புகளையும் பொதுமக்கள் வாங்கிச் சென்தால் விற்று தீா்ந்தது.