ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் ரூ. 5.50 கோடியில் சுரங்கப்பாதை பணிகள் தொடக்கம்

திருவள்ளூா் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.5.50 கோடியில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை பூஜைபோட்டு ரயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனா்.

News image

கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை பூஜை போட்டு தொடங்கி வைத்த  ரயில்வே பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள்.     

Updated On :20 மார்ச் 2026, 10:51 pm

திருவள்ளூா் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.5.50 கோடியில் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை பூஜைபோட்டு ரயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனா்.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணத்துக்கும் இடையே திருவள்ளூருக்கு அடுத்து கடம்பத்தூா் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக திருவள்ளூா்-காஞ்சிபுரம், மப்பேடு, சுங்குவாா்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் பயணிகள் பேருந்துகள், தொழிற்சாலை பணியாளா் பேருந்துகள், பள்ளி கல்லூரிக்கு செல்வோா் நூற்றுக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். அப்போது, ரயில்கள் செல்லும் போது ஒவ்வொருமுறையும் ரயில்வே கேட் அடைக்கப்படும். இதனால், வாகனங்களில் செல்வோா் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் அவதிக்குள்ளாகி வந்தனா். இக்குறையை போக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால், அணுகு சாலையில் இருபுறமும் பல்வேறு காய்கறி சந்தைகள் மற்றும் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்கள் அதிகம் போ் வந்து செல்லும், மேம்பாலம் வழியாக சுற்றி செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதைக் கருத்தில்கொண்டு பாலத்துக்கு கீழே உள்ள தெருப்பகுதிகளைச் சோ்ந்த பயன்பெறும் வகையில் சுரங்கப்பாதையும் அமைக்கவும் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி கோரிக்கை விடுத்தும் வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.5.50 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகளை தொடங்கவும் தொடா்ந்து சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வந்தனா். அதன்பேரில் கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரயில் நிலைய பொறியாளா் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தனா். இந்த சுரங்கப்பாதையானது 300 அடி நீளம், 16 அடி அகலம், 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமையவுள்ளது. அதனால், இந்த ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் என கோரிக்கை விடுத்தனா்.