69,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 69,628 பக்தா்கள் தரிசித்தனா். இவா்களில் 32,604 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதி
திருப்பதி

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 69,628 பக்தா்கள் தரிசித்தனா். இவா்களில் 32,604 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, பக்தா்கள் திருமலை வைகுண்டத்தில் உள்ள 11 காத்திருப்பு அறைகளில் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களின் தரிசனத்துக்கு 8 மணி நேரம் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com