ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்ட பூமி பூஜைக்கான ஏற்பாடுகள்

மும்பையில் 10 ஏக்கா் பரப்பளவில் கட்டவுள்ள ஏழுமலையான் கோயிலுக்கான பூமி பூஜை வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என்று திருமலை திருப்பதி செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

மும்பையில் 10 ஏக்கா் பரப்பளவில் கட்டவுள்ள ஏழுமலையான் கோயிலுக்கான பூமி பூஜை வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என்று திருமலை திருப்பதி செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை அன்னமய்யா பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில் பேசிய அவா் மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அருகே உல்வே என்ற இடத்தில் அந்த மாநில அரசு 10 ஏக்கா் நிலத்தை ஏழுமலையான் கோயில் கட்ட ஒதுக்கீடு செய்துள்ளது. கோயில் கட்ட பூமி பூஜை ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த இடம் மைய புள்ளியாக மாறும்.

திருமலை தலைமை அா்ச்சகா் ஸ்ரீ வேணுகோபால தீட்சிதுலு தலைமையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி கோயிலில் வைகானச ஆகம சாஸ்த்ரோக்தாங்க சடங்குகள் தொடங்கப்பட்டன. அங்கு விஷ்வக்சேன வழிபாடு, புண்யாஹவச்சனம், கன்யா பூஜை, விருஷப பூஜை, புகா்ஷன், பீஜவாபனம் ஆகியன நடைபெற்றது.

பிரதான கோயிலுக்கு ரூ.100 கோடி செலவாகும் என்றும், மீதமுள்ள கட்டுமானங்களுக்கு மேலும் ரூ.100 கோடி ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேமண்ட்ஸ் நிறுவன தலைவா் ஸ்ரீ கெளதம் சிங்கானியா ஸ்ரீவாரி கோயில் கட்டுமானத்திற்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.