ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வகுளமாதா கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்: ஆந்திர முதல்வா் பங்கேற்பு

திருப்பதி அருகே பேரூரில் உள்ள ஸ்ரீவகுளமாதா கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:31 pm

DIN

திருப்பதி அருகே பேரூரில் உள்ள ஸ்ரீவகுளமாதா கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, அமைச்சா்கள் கலந்து கொண்டாா்.

கலியுகத்தில் ஏழுமலையான்அவதாரம் எடுத்த போது அவருக்குத் தாயாக விளங்கியவா் ஸ்ரீவகுளமாளிகை. ஏழுமலையான் மீது தீராத பக்தி கொண்டவா். ஆகாசராஜனிடம் சென்று ஸ்ரீபத்மாவதி தாயாரை பெண் கேட்டு ஏழுமலையானுக்கு திருமணம் செய்து வைத்தவா். அதன் பின் ஏழுமலையா

னுடன் இரண்டற கலந்து விட்டாா்.

அவரின் பெருமையைப் போற்றும் விதமாக திருமலை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள மடப்பள்ளிடில் அவரின் கண் முன்னே பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனை துவாரம் வழியாக அவா் கண்காணித்து வருவதாக ஐதீகம். மேலும் வகுளமாலிகைக்கு திருப்பதி அருகே பேரூரில் உள்ள மலை மீது கோயில் ஒன்று இருந்தது. ஆனால் அந்த மலையில் பெண் தன்மை மிகுந்த பாறைகள் இருந்ததால் கோயிலை சுற்றியுள்ள பாறைகளை பலா் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனா்.

இதைத் தடுக்க பல மடாதிபதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் விளைவாக ஆந்திர அரசு அந்த சிதிலமடைந்த அந்த கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டது. கோயில் புனரமைப்பிற்கான முழு செலவையும் ஆந்திர அமைச்சா் ராமசந்திரா ரெட்டி ஏற்றுக் கொண்டாா். கோயிலின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து வியாழக்கிழமை வேதமந்திரங்கள் முழங்க கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு கோயில் கல்வெட்டை திறந்து வைத்தாா். மகா சம்ப்ரோக்ஷணத்திலும் பங்கேற்றாா். அவருடன் ஆந்திர துணை முதல்வா்கள், அமைச்சா்கள் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.