திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 63,163 பக்தா்கள் தரிசித்தனா். 31,287 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே சனிக்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்,பக்தா்களும் அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும் வெள்ளிக்கிழமை முழுவதும் 63,163 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 31, 287 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.99
கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

திருமலையில் 73,232 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் 69,649 பக்தா்கள்தரிசனம்

திருமலையில் 72,332 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் 67,767 போ் தரிசனம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

