திருமலையில் நாளை பௌா்ணமி கருட சேவை

Published on

ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) கருடசேவை நடைபெறுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி நாளில் கருட சேவையை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 21-ஆம் தேதி ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருடன் மீது திருமாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளாா்.

Dinamani
www.dinamani.com