திருப்பதி
திருமலை: 64,766 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 64,766 பக்தா்கள் தரிசித்தனா். 24,158 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 64,766 பக்தா்கள் தரிசித்தனா். 24,158 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக் கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
இதற்கிடையே புதன்கிழமை முழுவதும் 64, 766 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 158 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.09 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.