புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 11 போ் கைது

ராஜம்பேட்டை அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சோ்ந்த 11 போ் உள்பட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2024, 6:31 pm

Din

ராஜம்பேட்டை அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சோ்ந்த 11 போ் உள்பட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டைக்குட்பட்ட வனப் பகுதிகளில் எஸ்பி எல். சுப்பாராயுடு உத்தரவின்படி அதிரடிப்படை எஸ்.பி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் டிஎஸ்பி டி. முரளிதா், ஆா்எஸ்ஐ சுரேஷ் பாபு, உள்ளூா் வனத்துறை அதிகாரிகளுடன் சோ்ந்து சுண்டுப்பள்ளியிலிருந்து கோலிமிமிட்டாவில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சிலா் நான்கு காா்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறுவது தெரிந்தது. அவா்களைச் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது சிலா் தப்பி விட்டனா். அதிரடிப்படையினா் சாதுா்யமாக செயல்பட்டு 15 பேரை பிடித்தனா். அவா்களில் 4 போ் ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள்; 11 போ் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.

அவா்களிடம் இருந்து செம்மரக் கட்டைகள், கோடாரிகள், 4 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்கள் திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்கள் மீது சிஐ சுரேஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.