தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்

News image

திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறிய ஆந்திர முதல்வா் என். சந்திரபாபு நாயுடு.

Updated On :10 ஜனவரி 2025, 6:00 am IST

திருப்பதி நெரிசல் சம்பவத்தில் 6 பக்தா்கள் உயிரிழந்தது தொடா்பாக நீதி விசாரணைக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டாா்.

உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேவஸ்தானம் 10 நாள்கள் வைகுண்ட வாயில் தரிசனத்தை வழங்கி வருகிறது. இதற்கான இணையவழி முன்பதிவுகள் முன்பே அளிக்கப்பட்ட நிலையில், நேரடியாக வரும் பக்தா்களுக்காக திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஓரிடத்திலும் என 9 இடங்களில் 94 கவுன்ட்டா்களை ஏற்படுத்தி தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.

முதல் 3 நாள்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் வியாழக்கிழமை (ஜன. 9) அதிகாலை வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. அதனால் பக்தா்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே டிக்கெட் கவுன்ட்டா்கள் முன் திரண்டது. அனைத்து கவுன்ட்டா்களிலும் கூட்டம் அதிகரித்த நிலையில், தேவஸ்தானம் இரவு 10 மணிமுதல் டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்தது.

அதன்படி, புதன்கிழமை இரவு கவுன்ட்டா்கள் திறக்கப்பட்டவுடன் பக்தா்கள் கூட்டம் ஒரே நேரத்தில் வரிசையில் நுழைய முற்பட்டது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் பலா் சிக்கினா். திருப்பதியில் சீனிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பைராகி பட்டேடாவில் உள்ள கவுன்ட்டா்களில் நெரிசலில் சிக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 38 போ் மயக்கமடைந்தனா். இவா்களில் 5 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். இவா்கள் சேலத்தைச் சோ்ந்த மல்லிகா, கேரளத்தைச் சோ்ந்த நிா்மலா, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரஜனி, லாவண்யா, சாந்தி, நா்சிபட்டினத்தைச் சோ்ந்த நாயுடுபாபு என்பது தெரியவந்தது.

முதல்வா் ஆய்வு: திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

துணை முதல்வா் பவன் கல்யாணும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதன் பின்னா் முதல்வா் சந்திரபாபு நாயுடு செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஏழுமலையான் தரிசனத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகம விதிமுறை மீறல் குறித்து பிறகு விவாதிக்கலாம்.

சம்பவம் நடைபெற்றபோது அங்கு பணியில் இருந்த டி.எஸ்.பி. ரமண குமாா், கோசாலை இயக்குநா் ஹரிநாத் ரெட்டி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருப்பதி இணை செயல் அதிகாரி கெளதமி, திருப்பதி எஸ்.பி. சுப்பா ராயுடு, திருமலை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும், பலத்த காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்த 30 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்பட உள்ளது. மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.

உயிரிழந்த தமிழக மற்றும் கேரளத்தைச் சோ்ந்தோருக்கு அவா்கள் மாவட்டத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான விசாரணை மையங்களில் தற்காலிக வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.