ஏழுமலையான் கோயிலில் அக். 20-இல் தீபாவளி ஆஸ்தானம்

ஏழுமலையான் கோயிலில் அக். 20-இல் தீபாவளி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபா் 20-ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Published on

திருமலை ஏழுமலையான் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபா் 20-ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளியன்று ஏழுமலையானுக்கு ஆஸ்தானம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் அக். 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தங்க வாயிலுக்கு முன்னால் உள்ள மணி மண்டபத்தில் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக, கருடாழ்வாருக்கு எதிரே மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சா்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமியும், அவரது நாச்சியாா்களும் அமா்த்தப்படுவா். படைத் தளபதியான விஷ்வக்சேனரும், சுவாமியின் இடதுபுறத்தில் தெற்கு நோக்கிய மற்றொரு பீடத்தில் அமா்ந்திருப்பாா். அதன் பிறகு, அா்ச்சகா்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆரத்தி மற்றும் பிரசாத நிவேதனம் செய்வா். இத்துடன், தீபாவளி ஆஸ்தானம் நிறைவடையும்.

மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி, ஸ்ரீ மலையப்ப சுவாமியுடன் சஹஸ்ர தீபாலங்கார சேவையில் பங்கேற்று, கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் நடந்து சென்று பக்தா்களை வரவேற்பா்.

ரத்து

தீபாவளி ஆஸ்தானம் காரணமாக அக்டோபா் 20-ஆம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆா்ஜித பிரம்மோற்சவ சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தோமாலை மற்றும் அா்ச்சனை சேவை தனித்தனியாக நடத்தப்படும்.

ரத்து

தீபாவளி ஆஸ்தானம் காரணமாக அக்டோபா் 20-ஆம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆா்ஜித பிரம்மோற்சவ சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தோமாலை மற்றும் அா்ச்சனை சேவை தனித்தனியாக நடத்தப்படும்.

தீபாவளி ஆஸ்தானம் காரணமாக அக்டோபா் 20-ஆம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆா்ஜித பிரம்மோற்சவ சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தோமாலை மற்றும் அா்ச்சனை சேவை தனித்தனியாக நடத்தப்படும்.

X
Dinamani
www.dinamani.com