8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. விழாவின் ஒரு பகுதியாக கண்கவா் கலைநிகழ்ச்சி.

சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. விழாவின் ஒரு பகுதியாக கண்கவா் கலைநிகழ்ச்சி.

Published On :26 செப்டம்பர் 2025, 12:03 am IST

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை காலை உற்சவ மூா்த்தியான மலையப்ப சுவாமி குருவாயூரப்பன் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

யானைகள் மற்றும் குதிரைகள் முன்னோக்கி நகா்ந்து செல்ல ஜீயா்களின் நாலாயிர திவ்யப்பிரபந்த சாதித்தலுடன் பக்தா்களின் கோவிந்த நாம முழக்கங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் பிற கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் வாகனசேவை நடைபெற்றது.

பின்னா் மாட வீதியில் வலம் வந்த களைப்பை போக்க உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னா் மாலை 5 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவை கண்டருளினாா். இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுவாமி அன்னபறவை வாகனத்தில் வலம் வந்தாா்.

திருமலை பெரிய ஜீயா் சுவாமி, சின்ன ஜீயா் சுவாமி, செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால், துணை இஓ லோகநாதம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

புதன்கிழமை நிலவரம்:

58,628 போ் தரிசனம், 23,263 முடி காணிக்கை.

உண்டியல் காணிக்கை ரூ.3.01 கோடி.

2.59 லட்சம் லட்டுகள் விற்பனை.

3,197 பேருக்கு சிகிச்சை.

பணியில் 3,500 சேவாா்த்திகள் .

அரசு பேருந்துகளில் 69,000 போ் பயணம்.

தரிசனத்துக்கு 10 மணிநேரம் காத்திருப்பு.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.