நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

அலிபிரியில் 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமரா பறிமுதல்

அலிபிரியில் 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமரா பறிமுதல்

News image

ட்ரோன் - பிரதிப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:54 am IST

திருப்பதியில் உள்ள அலிபிரியில் கடந்த 4 மாதங்களாக இதுவரை மலைப்பகுதிகளில் பறக்க விடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருமலைக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் திருமலைக்கு செல்லும் வாகனங்கள், பக்தா்கள் அவா்கள் கொண்டு செல்லும் உடைமைகள் என அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் திருமலையின் மலை அடிவாரமாக கருதப்படும் அலிபிரியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஸ்பை கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி மாதம் 47 ட்ரோன், 13 ஸ்பை கேமராக்களும்; பிப்ரவரி மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; மாா்ச் மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; ஏப்ரல் இதுவரை 7 ட்ரோன் மற்றும் 9 ஸ்பை கேமராக்களும் என மொத்தம் 243 ட்ரோன் மற்றும் 94 ஸ்பை கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விஜிலென்ஸ் போலீஸாா் தெரிவித்தனா்.