நாகலாபுரம் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்
திருப்பதி: நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோயிலில் பிப். 17 முதல் 22 வரை விமான ஜத்ரோத்தாரண அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி அடுத்த நாகலாபுரத்தில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ வேதநாராயண சுவாமி கோயிலில் விமான ஜத்ரோத்தாரண அஷ்டபந்தன சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆசாா்ய ரித்விக் வாரணம், புண்யாஹம் மிருதசங்கராணம், அங்குராா்பணம் நடக்கிறது.
18-ஆம் தேதி காலை அஷ்ட பந்தன சமா்ப்பணமும், மாலையில் புண்யாஹம், பஞ்சக்னி பிரதிஷ்டை, கும்ப வாகனம், ஆராதனை, ஹோமம், பூா்ணாஹுதியும், 19-ஆம் தேதி பஞ்ச கவ்யாதிவாசம் மற்றும் நவ கலச ஸ்னபனமும் நடைபெறும்.
20-ஆம் தேதி காலை க்ஷீரப்திவாசம் நடைபெறும், மாலையில் யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெறும், காலையில் ஜலதிவாசம் நடைபெறும், மாலையில் மகா சாந்தி திருமஞ்சனம் நடைபெறும்.
பிப். 22-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை விமான ராஜகோபுர சம்ப்ரோக்ஷணம் நடைபெறும், மேலும் காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை கா்ப்பாலய மூலவரின் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறும். பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

