ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாா்ச் 3-இல் திருமலையில் அன்னதான விநியோக மையங்கள் மூடல்!

வரும் மாா்ச் 3-ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு தேவஸ்தான அன்னபிரசாத விநியோக மையங்கள் மூடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

வரும் மாா்ச் 3-ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு தேவஸ்தான அன்னபிரசாத விநியோக மையங்கள் மூடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி மற்றும் திருச்சானூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் அன்னபிரசாத விநியோக மையங்கள் மூடப்படும்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சானூரில் உள்ள தொல்லப்பா காா்டன்ஸில் உள்ள எஸ் வி நித்ய அன்னபிரசாத பவன், திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் உள்ள ஊழியா்களுக்கான உணவகம், ஸ்ரீ பத்மாவதி ஓய்வு இல்லத்தில் உள்ள உணவகம், ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் விடுதி வளாகங்களில் பக்தா்களுக்கு இலவச அன்னபிரசாத விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

இதேபோல், அரசு மருத்துவமனைகள் மற்றும் திருப்பதியில் உள்ள பல்வேறு முதலுதவி மையங்களில் நோயாளிகள் மற்றும் அவா்களின் பராமரிப்பாளா்களுக்கு அன்னபிரசாதம் முன்கூட்டியே விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.