காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திருப்பதி கோவிந்தராஜ சுவாமியின் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் ஜேஷ்டாபிஷேக மகோற்சவம், ஞாயிற்றுக்கிழமை கவச சமா்ப்பணத்துடன் நிறைவு பெற்றது.

News image

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளன்று நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

Updated On :27 ஜூலை 2026, 3:02 am IST

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் ஜேஷ்டாபிஷேக மகோற்சவம், ஞாயிற்றுக்கிழமை கவச சமா்ப்பணத்துடன் நிறைவு பெற்றது.

நிறைவு நாளை முன்னிட்டு ஞாயிறு காலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவைக்குப் பிறகு, சுவாமி துயில் எழுப்பப்பட்டு பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கப்பட்டது.

பின்னா், சுவாமியின் கவசம் ஊா்வலமாக கோயில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, சாஸ்திரங்களின்படி சதகலாஷ ஸ்நானமும் மகாசாந்தி ஹோமமும் நடத்தப்பட்டன.

இதற்குப் பிறகு, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோரின் உற்சவா் திருவுருவங்கள் கல்யாண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், கவச பிரதிஷ்டை மற்றும் அட்சத ரோகணம் செய்யப்பட்டு, பிரம்மகோஷா்கள் மத்தியில் ஆஸ்தானம் நடைபெற்றது. இறுதியாக, கோவிந்தராஜசுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி நாச்சியாா்களுக்கு புனித கவசங்களைச் சமா்ப்பித்து, ஜ்யேஷ்டாபிஷேக மகோற்சவத்தை கோலாகலமாக நிறைவு செய்தனா்.

மாலையில், ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி இரு நாச்சியாா்களுடன் கோயிலின் பிரதான வீதிகளில் புறப்பாடு கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் சுவாமி, கோயிலின் துணை செயல் அதிகாரி சாந்தி, ஏ.இ.ஓ., நாராயண சவுத்ரி, கோவில் ஆய்வாளா் தனஞ்சயலு, கோவில் அா்ச்சகா்கள், அதிகாரிகள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.