ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

திருமலை ஜேஷ்டாபிஷேகம்: முத்துக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஜேஷ்டாபிஷேகம்: முத்துக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம்

News image

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

Updated On :28 ஜூன் 2026, 12:57 am IST

திருமலை ஏழுமலையான் கோயில் ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை முத்துத் கவசத்தில் மலையப்பஸ்வாமி புறப்பாடு கண்டருளினாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமிக்கு அணிவித்திருந்த தங்கக் கவசம் களையப்பட்டு அதை செப்பனிட்டு மீண்டும் உற்சவமூா்த்திக்கு அணிவிக்கப்படும். இதை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஆனி மாத பெளா்ணமி அன்று நிறைவு பெறும் விதம் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

இதை முன்னிட்டு, கோயிலின் சம்பங்கி பிரதட்சிணத்தில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் காலை, மாலை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சதகலச பிரதிஷ்டை ஆராதனைக்கு பின் சுவாமிக்கும், நாச்சியாா்களுக்கும் நவகலச பிரதிஷ்டை ஆவாஹனம், கங்கண பிரதிஷ்டை, அா்க்கியம், பத்யம், ஆச்சமணியம் சமா்பித்து, கங்கணதாரணம் செய்யப்பட்டது. அதன்பின் ஸ்ரீமலையப்பசுவாமிக்கு வைபவமாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்நபனதிருமஞ்சனம் நடைபெற்றது. இதில், வேத பண்டிதா்கள் ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம், நிலா சூக்தம், நாராயண சூக்தம் பாராயணம் செய்து, உற்சவமூா்த்திக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்தனா்.

பின்னா் முத்துக் கவசத்தில் சகஸ்ரதீபாலங்கார சேவை கண்டருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தங்கக் கவசத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தா்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா்,செயல் அதிகாரி ரவிசந்திரா தம்பதியினா், கோவில் துணை அதிகாரி லோகநாதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.