டெங்கு ஒழிப்புப் பணி: வீடு, வீடாக ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் நடைபெறும் டெங்கு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வீடு, வீடாகச் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் நடைபெறும் டெங்கு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வீடு, வீடாகச் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மேற்கு கோபுரம் எதிரே உள்ள பே கோபுரத் தெருக்களில் வீடு, வீடாகச் சென்ற ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகியிருந்ததைக் கண்டறிந்தார்.
அந்த டெங்கு கொசுப்புழுக்களை பொதுமக்களிடம் காண்பித்த ஆட்சியர், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். மேலும், இந்தப் பகுதியில் உள்ள குப்பையை அகற்றவும், கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். அப்போது, 3 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தினமும் குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com