நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஆரணியில் இன்று வீடு தேடி சட்ட உதவி முகாம் தொடக்கம்

ஆரணி, ஆரணியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடு தேடி சட்ட உதவி முகாம் வியாழக்கிழமை (நவ.9) தொடங்கி வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:20 am

DIN

ஆரணி, ஆரணியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடு தேடி சட்ட உதவி முகாம் வியாழக்கிழமை (நவ.9) தொடங்கி வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு, தேசிய சட்டப் பணிகள் உத்தரவின்
பேரில், திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான பி.மகிழேந்தி, ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான எஸ்.எழில்வேலவன் ஆகியோரின் மேற்பார்வையில், ஆரணியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீடு தேடி சட்ட உதவி முகாம் வியாழக்கிழமை (நவ.9) தொடங்கி வரும் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு வீடுதோறும் சட்ட தன்னார்வலர்கள் மூலமாக சட்ட உதவி குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு இந்த முகாம் மூலம் உடனடி தீர்வு காணலாம்.
முகாமில் இலவசமாக வழக்குகளை நடத்தவும், சட்டப் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும். முகாமுக்கான ஏற்பாடுகளை ஆரணி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வி.வெங்கடேசன், வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர்
ஏ.சிகாமணி, ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.