திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் இலக்கியச் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகம், சென்னை வாசகச் சாலை அமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தின.
நிகழ்ச்சிக்கு மைய நூலக நல் நூலகர் சாயிராம் தலைமை வகித்தார்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய "பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நாவல் குறித்து பேராசிரியர் வே.நெடுஞ்செழின் நூலாய்வு செய்து, சிறப்புரையாற்றினார்.
நூலாசிரியர் கதாபாத்திரங்களைக் கையாண்ட விதம், மொழி, இலக்கியம் நயம் என அனைத்தையும் பகுப்பாய்வு செய்து அவர் பேசினார். சென்னை வாசகச் சாலையின் மாரிசெல்வம், துரைபாண்டி, ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நல் நூலகர் திருச்செந்தில், நூலகர்கள் ஹேமா, பானு, நூலகப் பணியாளர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், வாசகர்கள், ஆய்வு மாணவர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சிறந்த நூல்கள், சிறந்த ஆளுமைகளுடன் "தென்றல்' என்ற பெயரில் இந்த இலக்கியச் சந்திப்புக் கூட்டம் நடைபெறும் என முதல் நிலை நூலகர் பெ.வள்ளி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

