ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாவட்ட மைய நூலகத்தில் இலக்கியச் சந்திப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் இலக்கியச் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:40 pm

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் இலக்கியச் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகம், சென்னை வாசகச் சாலை அமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தின. 
நிகழ்ச்சிக்கு மைய நூலக நல் நூலகர் சாயிராம் தலைமை வகித்தார். 
மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய  "பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நாவல் குறித்து பேராசிரியர் வே.நெடுஞ்செழின் நூலாய்வு செய்து, சிறப்புரையாற்றினார்.
நூலாசிரியர் கதாபாத்திரங்களைக் கையாண்ட விதம், மொழி, இலக்கியம் நயம் என அனைத்தையும் பகுப்பாய்வு செய்து அவர் பேசினார். சென்னை வாசகச் சாலையின் மாரிசெல்வம், துரைபாண்டி, ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நல் நூலகர் திருச்செந்தில், நூலகர்கள் ஹேமா, பானு, நூலகப் பணியாளர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், வாசகர்கள், ஆய்வு மாணவர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சிறந்த நூல்கள், சிறந்த ஆளுமைகளுடன் "தென்றல்' என்ற பெயரில் இந்த இலக்கியச் சந்திப்புக் கூட்டம்  நடைபெறும் என முதல் நிலை நூலகர் பெ.வள்ளி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.