எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

விஜயகாந்த் நலம் பெற வேண்டி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை

வேட்டவலம் நகர தேமுதிக சார்பில், விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 10:02 am IST

வேட்டவலம் நகர தேமுதிக சார்பில், விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதியில் உள்ள தூய நெஞ்ச தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்.
நகர துணைச் செயலர்கள் பலராமன், சிவக்குமார், வட்டச் செயலர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய பங்குத்தந்தை எஸ்.கிளமெண்ட் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினார். இதில், ஒன்றியப் பிரதிநிதி ஏழுமலை, கேப்டன் மன்றச் செயலர் வெங்கடேசன், ராஜேஷ், சரவணன், ஆரோக்கியதாஸ், மணிகண்டன், சிலுவை ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.