ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

எம்எல்ஏவை தாக்கியதாக சிறையில் அடைக்கப்பட்டவர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவை தாக்கியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்

News image
Updated On :1 மார்ச் 2018, 2:41 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவை தாக்கியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, எம்எல்ஏவைக் கைது செய்யக் கோரி, உயிரிழந்தவரின் உறவினர்கள் போளூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போளூர் நகரில் உள்ள அரசிங் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் வசந்தம்மணி (எ) மணிகண்டன் (41). இவர், மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். 
மேலும், கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்துக்காக அந்தத் தொகுதியில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வசந்தம்மணி மேடை அலங்காரம் செய்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மேடை அலங்காரம் அமைத்ததற்காக வசந்தம்மணிக்கு எம்எல்ஏ பணம் தர வேண்டி இருந்ததாம். இந்தப் பணத்தை கேட்கச் சென்றபோது, வசந்தம்மணியை எம்எல்ஏவின் உதவியாளர்கள் தாக்கினராம்.
இதையடுத்து, கடந்த 19-ஆம் தேதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வத்தை வசந்தம்மணி தாக்கினாராம். பின்னர், போளூர் காவல் நிலையத்தில் வசந்தம்மணி மீது எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் புகார் அளித்தார். அதன்பேரில், வசந்தம்மணியை போளூர் போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
சிறையில் இந்த வசந்தம்மணிக்கு கடந்த 24-ஆம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், வசந்தம்மணி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
2 இடங்களில் சாலை மறியல்: இதுகுறித்து தகவலரிந்த வசந்தம்மணியின் மனைவி சுனிதாவும், அவரது உறவினர்களும் போளூரில் உள்ள வேலூர் - திருவண்ணாமலை சாலையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, உதவிக் காவல் கண்காணிப்பாளர் ரவாளிப்ரியா, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரங்கராஜன், போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வசந்தம்மணியை 15 நாள்கள் காவலில் வைக்க வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் தான் உத்தரவிட்டிருந்தார். 
எனவே, அவரிடம் சென்று உங்களது குறைகள், புகார்களைக் கூறுங்கள் என அறிவுறுத்தி, காவல் வாகனத்தில் வசந்தம்மணியின் மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் என சுமார் 16 பேரை அனுப்பி வைத்தனர்.
இதேபோல, போளூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட வசந்தம்மணியின் மாமியார்,  உறவினர்களை பேருந்து நிலையத்தின் ஓரமாக அமர்ந்திருக்குமாறு கூறி அப்புறப்படுத்தியதுடன், அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.