அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆசிரியை தீக்குளித்து சாவு: தந்தை போலீஸில் புகார்

செய்யாறு அருகே தனியார் பள்ளி ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக, அவரது தந்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகார் அளித்தார்.

News image
Updated On :14 மே 2018, 10:56 pm

DIN

செய்யாறு அருகே தனியார் பள்ளி ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக, அவரது தந்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகார் அளித்தார்.
அரக்கோணம் வட்டம், திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் சரஸ்வதி (32). இவருக்கும் செய்யாறை அடுத்த சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரணி என்பவருக்கும் கடந்த 9.9.2012-இல் திருமணம் நடைபெற்றதாம்.
பரணி செய்யாறில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். சரஸ்வதி சித்தாத்தூர் கூட்டுச் சாலையில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாராம்.
இந்த நிலையில், சரஸ்வதி உறவினர் ஒருவருடன் செல்லிடப்பேசியில் பேசியது குறித்து பரணி சந்தேகமடைந்து கேட்டுள்ளார். இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சரஸ்வதி உடலில் தீக்காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து அவரது தந்தை தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தூசி போலீஸில் புகார் செய்தார்.
அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், திருமணமாகி 6 வருடங்களே ஆவதால், செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.