திருவண்ணாமலை நகராட்சியின் 39 வார்டுகளிலும் தூய்மை அருணை திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணி, மரக்கன்று நடும் பணிகள் நடைபெற்றன.
இந்தப் பணிகளை தூய்மை அருணை திட்டத்தின் அமைப்பாளரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, திருவண்ணாமலை, தாமரை நகரில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணியை அவர் பார்வையிட்டார். பின்னர், நகரின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடி அடங்கிய பொட்டலங்களை எ.வ.வேலு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி, ப.கார்த்திவேல்மாறன், சி.என்.அண்ணாதுரை, மருத்துவர் எ.வ.வே.கம்பன், ர.செல்வராஜ், ரா.ஜீவானந்தம், குட்டி க.புகழேந்தி, மா.சின்ராஜ், அ.அருள்குமரன், ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









