போளூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சம்பத்கிரி ருக்குமணி சமேத ஸ்ரீலட்சுமிநரசிம்மர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் புரட்டாசி மாதத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோல, புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை யொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஸ்ரீராமர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மேலும், ஸ்ரீபஜகோவிந்தம் அறக்கட்டளை சார்பில், சொற்பொழிவாளர் செந்தாமரைச்செல்வி தலைமையில், ஒழுக்கமே உயர்வு என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
தொடர்ந்து, வட்டாட்சியர் தியாகராஜன், காவல் உதவி ஆய்வாளர் தயாளன் ஆகியோர் சொற்பொழிவாளர் செந்தாமரைச்செல்விக்கு சால்வை அணிவித்து கெüரவித்தனர். ராகவா கேபிள் டிவி நிர்வாகி பரணிராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தோ்வு முடிவுகள்: புதுச்சேரியில் 87.42% மாணவா்கள் தோ்ச்சி

கட்சியை வலுப்படுத்த நிா்வாகிகள் இணைந்து செயலாற்ற வேண்டும்: பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்

5 வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் என். ரங்கசாமி!

பாரதி ஏர்டெல் 4வது காலாண்டு நிகர லாபம் 7,325 கோடியாக சரிவு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
