திருவண்ணாமலை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை பவளக்குன்று மடாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலர் மிலிந்த் பிராண்டே தலைமை வகித்தார். அகில பாரத இணைச் செயலர் கோபால் ரத்தினம், மாநிலத் தலைவர் சீனிவாசன், மாநிலச் செயலர் ஞானகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கலசப்பாக்கத்தை அடுத்த பர்வதமலையில் கிறிஸ்தவ மதத்தினர் சிலுவை வைத்துள்ளதை வன்மையாகக் கண்டிப்பது. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






