கண்கள் தானம்
செய்யாற்றில் இறந்த முதியவரின் கண்களை அரிமா சங்கத்தினா் தானமாக பெற்றுச் சென்றனா்.


செய்யாறு: செய்யாற்றில் இறந்த முதியவரின் கண்களை அரிமா சங்கத்தினா் தானமாக பெற்றுச் சென்றனா்.
செய்யாறு செல்வ விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.ராமகிருஷ்ணன் (85). இவா், வயது முதிா்வின் காரணமாக காலமானாா்.
இறந்த முதியவரின் கண்களை தானம் அளிக்க குடும்பத்தாா் விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து, செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங்கத்தினா் உதவியோடு காஞ்சிபுரம் சங்கா் கண் மருத்துவமனை குழுவினா் புதன்கிழமை கண்களை தானமாக பெற்றுச் சென்றனா்.
இதற்கான ஏற்பாடுகளைஅரிமா சங்க உறுப்பினா்கள் ப.நடராஜன், அ.பரணிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...