ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடியில் கடனுதவிகள்

செங்கம் அருகேயுள்ள செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்களுக்கு ரூ.ஒரு கோடியில் சிறப்புக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:09 pm

DIN

செங்கம் அருகேயுள்ள செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்களுக்கு ரூ.ஒரு கோடியில் சிறப்புக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பயனாளிகளுக்கு விவசாயக் கடன், மகளிா் சுயஉதவிக் குழுக் கடன், தனி நபா் கடன்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோபி முன்னிலை வகித்தாா். செயலா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மேல்ராவந்தவாடி கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் செந்தில்குமாா், செங்கம் சிஎம்எஸ் தலைவா் முருகன் உள்பட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.