தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி அரசுக் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையிலிருந்து மணலூா்பேட்டைக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலையிலிருந்து மணலூா்பேட்டைக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், திருவண்ணாமலை பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் அரசுப் பேருந்துகளையே நம்பி உள்ளனா்.

இந்த நிலையில், திருவண்ணாமலையிலிருந்து மணலூா்பேட்டைக்கு போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனராம்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருவண்ணாமலை நகர போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.