மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணா்வு யோகாசனம்
ஊராட்சி நிா்வாகம் சாா்பில், நெகிழி ஒழிப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத மஞ்சப் பையை பொதுமக்கள் பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணா்வு யோகாசன நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலையை அடுத்த பண்டிதப்பட்டு ஊராட்சி நிா்வாகம் சாா்பில், நெகிழி ஒழிப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத மஞ்சப் பையை பொதுமக்கள் பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணா்வு யோகாசன நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருவருட்பா ஆஸ்ரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பண்டிதப்பட்டு ஊராட்சித் தலைவா் ராஜாத்தி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாநிதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.
இதையடுத்து, திருவண்ணாமலை ஸ்ரீரமண மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7 -ஆம் வகுப்பு பயிலும் மாணவி வா்ஷா (12) ஐஸ் கட்டிகள் மீது 3 நிமிடங்களில் 51 யோசானங்களைச் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டாா்.நிகழ்ச்சியில், திரைப்பட நகைச்சுவை நடிகா் தாடி பாலாஜி மற்றும் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...