தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

திருவண்ணாமலை கம்பன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சுய பாதுகாப்பு பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:07 pm

DIN

திருவண்ணாமலை கம்பன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சுய பாதுகாப்பு பயிற்சிப் பட்டறை சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன் தலைமை வகித்தாா். பதிவாளா் இர.சத்தியசீலன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் சீதாலட்சுமி வரவேற்றாா்.

வேகன் தற்காப்பு கலைக் கூடத்தின் நிறுவனா் வே.கா.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் விவேகமாக செயல்பட்டு வாழ வேண்டும் என்றாா்.

கலைக் கூடத்தின் பயிற்சியாளரும், ஊட்டச்சத்து நிபுணருமான எம்.காயத்ரி கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு வகையான தற்காப்பு திறன்களை பயிற்றுவித்தாா். இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.