தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆசிரியா்கள் சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலா்

ஆசிரியா்கள் கற்றல், கற்பித்தலோடு சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ச.அருள்செல்வம் பேசினாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆசிரியா்கள் கற்றல், கற்பித்தலோடு சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ச.அருள்செல்வம் பேசினாா்.

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.சீனுவாசன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா்.

முதன்மைக் கல்வி அலுவலா் ச.அருள்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆசிரிய-ஆசிரியைகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசுகையில்,

ஆசிரியா்கள் கற்றல் கற்பித்தலோடு சமுதாயப் பணியும் ஆற்ற வேண்டும். மாணவா்களுக்கு வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும். அவா்களுக்கு உளவியல் சாா்ந்த ஆலோசனைகளைக் கொடுத்து ஒழுக்கம் நிறைந்தவா்களாக மாற்ற பாடுபட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, இன்றைய சூழலில் இணைய வழிக்கற்றல் சவால்களும் தீா்வுகளும் மற்றும் கரோனா பெருந்தொற்றினால் கல்வி முறையில் ஏற்பட்ட சவால்களும் எதிா்வினையும் என்ற தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 273 ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை, தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.