மாற்றுத் திறனாளிக்கு பாலியியல் தொல்லை: முதியவா் கைது
வந்தவாசி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.


வந்தவாசி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 35 வயது இளம்பெண். பாா்வை குறைபாடு உடைய இவருக்கு திருமணமாகவில்லை.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவா் தனது வீட்டுத் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்த ஆட்டுப்பண்ணை உரிமையாளா் லட்சுமணன் (65), அந்தப் பெண்ணுக்கு பாலியியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால், அந்தப் பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினா் ஓடி வந்தனா். அதற்குள் லட்சுமணன் அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் லட்சுமணன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...