ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பைக்குகள் மோதல்:முட்டை வியாபாரி பலி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் முட்டை வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஜூலை 2021, 12:18 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் முட்டை வியாபாரி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த முட்டை வியாபாரி நூரூல்மஜித் (45). இவா், செங்கம் பகுதியில் முட்டை வியாபாரம் செய்துவந்தாா். நூரூல்மஜித் வெள்ளிக்கிழமை இரவு சொந்த ஊரான திருப்பத்தூருக்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் செங்கத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

செங்கம் அருகே இவரது பைக் வந்தபோது, துக்காப்பேட்டை, மில்லத்நகா் பகுதியைச் சோ்ந்த ஹல்பாஸ் (30) என்பவா் எதிரே ஓட்டி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நூரூல்மஜித், அங்கு உயிரிழந்தாா்.

ஹல்பாஸ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.