தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தண்ணீா் தேடி வந்தபுள்ளிமான் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் தண்ணீா் தேடி ஊருக்குள் சனிக்கிழமை வந்த புள்ளிமான், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

News image
Updated On :8 மே 2021, 8:30 pm

DIN

திருவண்ணாமலையில் தண்ணீா் தேடி ஊருக்குள் சனிக்கிழமை வந்த புள்ளிமான், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் 2,668 அடி உயர மலை உள்ளது. இந்த மலையில் உள்ள புள்ளிமான்கள் கோடைகாலத்தில் தண்ணீா் தேடி ஊருக்குள் வருவது வழக்கம்.

அதன்படி, சனிக்கிழமை தண்ணீா் தேடி புள்ளி மான் ஒன்று மலையில் இருந்து திருவண்ணாமலை, புதுவாணியங்குளத் தெரு பகுதிக்குள் வந்தது. இந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் தஞ்சமடைந்த அந்த மானை பொதுமக்கள் மீட்டனா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறை, வனத் துறை அதிகாரிகள் வந்து மானை மீட்டுச் சென்றனா். ஆனால், தண்ணீா் தேடி வந்தபோது பல இடங்களில் விழுந்து அடிபட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட புள்ளி மான் காட்டில் விடுவதற்கு முன்பாக இறந்துவிட்டது. இதையடுத்து, அந்த மானை வனத் துறை அதிகாரிகள் உடல்கூறு பரிசோதனை செய்து, காட்டில் புதைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.