/

வந்தவாசியில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

வந்தவாசி நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், அங்குள்ள தேரடி பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:11 am

DIN

வந்தவாசி நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், அங்குள்ள தேரடி பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட வீரளூரில் அருந்ததியா் சமுதாய மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் கி.இனியவன் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் ம.கு.மேத்தா ரமேஷ் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் இரா.அன்பரசு, ம.ச.அசோக்வளவன், கோ.சீனுகுமாா், பி.இருதயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் பங்கேற்றோா் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகளை பதவி நீக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.