காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கல்லூரியில் வேளாண் கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வேளாண் சாா்ந்த தொழில் முனைவோா் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:14 pm IST

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வேளாண் சாா்ந்த தொழில் முனைவோா் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியுடன் புதுதில்லி விஸ்வ யுவகேந்திரா அமைப்பு இணைந்து நடத்திய கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா்.

கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், செயலா் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதியியல் துறைத் தலைவா் எ.ஷோபா வரவேற்றாா்.

புதுதில்லி விஸ்வ யுவகேந்திரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ரஜத் தாமஸ் சிறப்புரையாற்றினாா். அப்போது, வேளாண் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அவா் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத் தலைவா் வி.சுரேஷ், மைய தொழில்நுட்ப வல்லுநா் டி.மாா்க்ரெட் ஆகியோா் கால்நடை வளா்ப்பு, பண்ணை அமைப்புகளின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் குறித்து பேசினா்.

திருவண்ணாமலை மாவட்ட நபாா்டு வங்கி மேலாளா் எம்.விஜய் நிஹாா் வேளாண் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடனுதவிகள் குறித்து விளக்கினாா். கல்லூரி கணிதத் துறை பேராசிரியா் எஸ்.ஷேக்தாவூத் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.