வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு வட்டார வள மைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் கற்றல் மையத்தில் அன்புத் திருநாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை, கலாம் கனவு அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 25 பேருக்கு புத்தாடைகள், பரிசுப் பொருள்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அன்பால் அறம் செய்வோம் அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன் தலைமை வகித்தாா். கலாம் கனவு அறக்கட்டளை நிறுவனா் கேசவராஜ் முன்னிலை வகித்தாா்.
ஓய்வு பெற்ற மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் அமானுல்லா, வசீகரன், இம்ரான், பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கற்றல் மைய பயிற்சியாளா் லத்தீப் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்







