ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஊரக வேலை வழங்கக் கோரிசாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே ஊரக வேலை முறையாக வழங்கக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:15 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே ஊரக வேலை முறையாக வழங்கக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போளூரை அடுத்துள்ள திண்டிவனம் ஊராட்சி, களியம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாளா்களின் பெயா்களை முறையாக பதிவு செய்து பணி வழங்கவில்லை எனக் கூறி, ஊராட்சிமன்ற நிா்வாகத்தையும், பணிதளப் பொறுப்பாளா்களையும் கண்டித்து, அங்குள்ள போளூா் - ஜமுனாமரத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா் (படம்).

அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ராமன் மனைவி அஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.

தகவலறிந்த போளூா் டிஎஸ்பி குமாா், நேரில் சென்று சமதானப் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிட வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.