உலக புத்தக தின விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையமும், கிளை நூலகமும் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, கிளை நூலகா் க.மோகன் தலைமை வகித்தாா். தெள்ளாா் இராஜா நந்திவா்மன் கல்லூரி இயக்குநா் எஸ்.அப்பாண்டைராஜன், இலவச சட்டப் பணிகள் குழு ஆலோசகா் வி.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.
வந்தவாசி வட்ட ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் பொன்.ஜினக்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்துப் பேசினாா். விழாவில் நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் ந.குப்புராஜ், ஆசிரியா் ம.ரகுபாரதி, செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் கு.சதானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிளை நூலகா் எஸ்.ஜோதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...