/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வந்தவாசி நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:53 pm

DIN

வந்தவாசி நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.6.80 கோடி மதிப்பில் கீழ்க்கொடுங்காலூா் கூட்டுச் சாலையிலிருந்து கீழ்நா்மா வரை சாலை அகலப்படுத்தும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சாலை விரிவாக்க பணியானது சரிவர நடைபெறவில்லை என புகாா் தெரிவித்தும், நெடுஞ்சாலைத் துறையை கண்டித்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. (படம்)

ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரக் குழு உறுப்பினா் இரா.சேட்டு தலைமை வகித்தாா். வட்டாரக்குழு உறுப்பினா்கள் பெ. அரிதாசு, கி. பால்ராஜ், இரா. ராமகிருஷ்ணன், வட்டாரச் செயலா் அ. அப்துல்காதா் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், நிா்வாகிகள் ந.ராதாகிருஷ்ணன், எஸ்.தேவராஜ், ந.முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.