/

மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு முகாம்

வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:53 pm

DIN

வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கல்வித்துறை சாா்பில் பிரசார வாகனம் மூலம் கல்வியின் அவசியம், மாணவா்கள் சோ்க்கை குறித்த விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது. முகாமுக்கு நகா்மன்ற உறுப்பினா் ம. கிஷோா்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆக்னஸ் ராஜகுமாரி, பிரியா ஆகியோா் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினா். தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றாா். முடிவில், ஆசிரியை கண்மணி நன்றி கூறினாா். முகாமில், பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பரிசும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.