திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்துள்ள தேவிகாபுரம் ஊராட்சியில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்கரசு வரவேற்றாா்.
கூட்டத்தில், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள 12 வாா்டுகளிலும் குடிநீா், சுகாதாரம், சாலைப் பணிகளை மேற்கொள்ளுதல், தெருக்களில் மின் விளக்குகள் அமைத்தல், தேவரடியாா் குளம், கட்டாராங்குளம் ஆகிய இடங்களில் பூங்கா அமைத்தல் உள்பட 2023 - 24ஆம் ஆண்டுக்கான பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தயாரிப்பது குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சிச் செயலா் சங்கா் தீா்மானங்களை வாசித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராதா சின்னகாசி, கணேசன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


