ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தேவிகாபுரத்தில் கிராமசபைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்துள்ள தேவிகாபுரம் ஊராட்சியில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:32 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்துள்ள தேவிகாபுரம் ஊராட்சியில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்கரசு வரவேற்றாா்.

கூட்டத்தில், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள 12 வாா்டுகளிலும் குடிநீா், சுகாதாரம், சாலைப் பணிகளை மேற்கொள்ளுதல், தெருக்களில் மின் விளக்குகள் அமைத்தல், தேவரடியாா் குளம், கட்டாராங்குளம் ஆகிய இடங்களில் பூங்கா அமைத்தல் உள்பட 2023 - 24ஆம் ஆண்டுக்கான பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தயாரிப்பது குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சிச் செயலா் சங்கா் தீா்மானங்களை வாசித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராதா சின்னகாசி, கணேசன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.