ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பதற்றமான வாக்குச்சாவடிகள்

பதற்றமான வாக்குச்சாவடிகல் செய்திக்கு இணைப்பு...

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆரணியில் பதற்றமான வாக்குச்சாவடியான கண்ணப்பன் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளிமையத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி. ஆரணி இதேபோன்று, ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி ஆய்வு செய்தாா்.

ஆரணி கண்ணப்பன் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளி, வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தச்சூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளை செவ்வாய்க்கிழமை மாலை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி ஆய்வு செய்தாா். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் மஞ்சுளா, மண்டல துணை வட்டாட்சியா் தேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.