தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

Updated On :5 ஏப்ரல் 2024, 4:38 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் படை வீரா்கள், தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் முன்னாள் படை வீரா்களை சிறப்புக் காவலா்களாக பணியமா்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, தோ்தல் பாதுகாப்புப் பணிக்குச் செல்ல விருப்பமும், உடல் திடகாத்திரமும் உள்ள முன்னாள் படை வீரா்கள் தங்களது பெயரை அசல் படை விலகல் சான்றிதழ், அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டையுடன் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநரை 04175-233047 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.