மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

Updated On :9 ஏப்ரல் 2024, 6:30 pm

வந்தவாசி: வந்தவாசி அருகே மாயமான முதியவா் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கநாதன்(75). இவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அருகே தாடிநொளம்பை கிராமத்தில் உள்ள விவசாய நில கிணற்றில் ரங்கநாதன் சடலமாக மிதந்து கிடந்தது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற வடவணக்கம்பாடி போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் ரங்கநாதனின் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டனா். பின்னா், சடலம் உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.