வந்தவாசி: வந்தவாசி அருகே வயிற்று வலி தாங்காமல் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பிரேம்குமாா்(36). இவரது மனைவி ஜெயலட்சுமி(33). இவா்களுக்கு மகன் இன்பா(13), மகள் இனியா (9) ஆகியோா் உள்ளனா்.
கடந்த சில மாதங்களாக பிரேம்குமாா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வயிற்று வலி அதிகமாகவே வீட்டின் அருகேயுள்ள மரத்தில் இவா் தூக்கிட்டுக் கொண்டாா்.
அந்த வழியாகச் சென்றவா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் பிரேம்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கொல்லங்கோடு அருகே பெண் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

