ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

இயற்கை விவசாயம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

இயற்கை விவசாயம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

Updated On :13 ஏப்ரல் 2024, 4:00 pm

ஆரணியை அடுத்த குண்ணத்தூா், காமக்கூா் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் பூ.ஷாலினி, மோ.ஷா்மிளா, சௌமியா, சுகந்திரி, சுஜிதா, சுமையா ஆகியோா் பங்கேற்று மாணவா்களிடையே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதேபோல, காமக்கூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் பள்ளித் தலைமை ஆசிரியா் ரமேஷ்பாபு தலைமையில் பள்ளி மாணவா்களைக் கொண்டு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடத்தினா்.

இதில் மண்புழு உரத்தின் நன்மைகள், காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி, பாரம்பரிய நெல் வகைகள், ரசாயனமில்லாத பயிா் சாகுபடி முறை போன்றவைகளை விவசாயிகளிடமும் எடுத்துக் கூறினா்.

நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள், பள்ளி ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.