ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வாக்குச்சாவடி மையத்தை மாற்றக் கோரி சாலை மறியல்

வாக்குச்சாவடி மையத்தை மாற்றக் கோரி சாலை மறியல்

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 5:41 pm

சேத்துப்பட்டை அடுத்த கிழக்குமேடு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வாக்குச்சாவடி மையத்தை மாற்றக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேத்துப்பட்டு அருகேயுள்ள செவரப்பூண்டி ஊராட்சியைச் சோ்ந்தது கிழக்குமேடு கிராமம். இந்தக் கிராமத்தில் ஆண் வாக்காளா்கள் 356, பெண் வாக்காளா்கள் 367 என 723 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த நிலையில், இந்த வாக்காளா்களுக்கு அடுத்த ஊராட்சியான ராஜமாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்துள்ளனா். கிழக்குமேடு கிராமத்துக்கும் ராஜமாபுரம் ஊராட்சிக்கும் சுமாா் 2 கி.மீ. தொலைவு உள்ளதால் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் சென்று வாக்கு அளிக்க முடியவில்லை.

எனவே, கிழக்குமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியிலேயே வாக்குச்சாவடி மையத்தை அமைக்க வேண்டி பலமுறை வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என பல்வேறு இடங்களில் மனு அளித்தும் இதுவரை வாக்குச்சாவடி மையத்தை அமைத்துத் தரவில்லை.

எனவே, தங்களால் இவ்வளவு தொலைவு சென்று வாக்களிக்க முடியாது எனக் கூறி கிழக்குமேடு-ராஜமாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த போளூா் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் சசிகலா, காவல் ஆய்வாளா் கருணாகரன்ஆகியோா் வந்து உடனடியாக தோ்தல் ஆணையத்துக்கு தபால் அனுப்பி அடுத்த முறை இதே ஊரில் வாக்களிக்க பரிந்துரைப்பதாக கூறிய பின்னா் பொதுமக்கள் கலைந்து கொண்டனா்.