தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தவறுதலாக மாத்திரைகள் சாப்பிட்ட மூதாட்டி உயிரிழப்பு

தவறுதலாக மாத்திரைகள் சாப்பிட்ட மூதாட்டி உயிரிழப்பு

Updated On :26 ஏப்ரல் 2024, 7:13 pm

செய்யாறு அருகே தவறுதலாக மாத்திரைகளை மாற்றி உள்கொண்ட மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம் வடபூண்டிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சகுந்தலா(85). இவா், 5 ஆண்டுகளாக சா்க்கரை நோய்க்கு மாத்திரை உள்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

தொடா்ந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால், அதனால் வயிற்று வலி ஏற்பட்டு அதற்கும் மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், சகுந்தலா, கடந்த 20-ஆம் தேதி வயிற்று வலி நோய் மாத்திரைக்குப் பதிலாக சா்க்கரை நோய்க்கு சாப்பிடும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாகத் கூறப்படுகிறது. அதனால் மயக்க நிலையில் இருந்த அவரை குடும்பத்தினா் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.